Monday, June 5, 2017

கல்யாண பெண்களுக்கான சில மழைக்கால அழகுக் குறிப்புகள்!!




மழைக் காலத்தில் மேக்கப் செய்து கொள்வது அவ்வளவாக சரிப்பட்டு வராது. அதிலும் இந்த மழைக் காலத்தில் நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்றால், உங்கள் மேக்கப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நீங்கள் ஒரு மணப் பெண்ணாக மழைக் காலத்தில் உங்களை அலங்கரித்துக் கொள்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ள இதோ சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

மேக்கப்பிற்கு முன்... உங்கள் திருமண நாளுக்கு முன்பாகவே உங்கள் சருமம் ஒரு நல்ல மேக்கப்பிற்குப் பக்குவப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, உங்கள் முகத்தில் உள்ள கண்களின் அடிப்பகுதி, மூக்கு, கன்னம், கழுத்து ஆகியவற்றை எப்போதும் ஈரப்பதமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

உதடுகள் உங்கள் உதடுகளுக்கு வண்ணம் பூசுவதற்கு, அதாவது லிப்ஸ்டிக் போடுவதற்கு அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். மழைக் காலமாக இருப்பதால், லிப் கிளாஸிற்குப் பதில் லிப் பாமைப் பயன்படுத்துவது நல்லது. மாலை நேரங்களில் பிரைட் லிப் ஷேடுகளை உபயோகிக்க வேண்டும். கேண்டி பிங்க், பவளம், சிவப்பு ஆகிய ஷேடுகள் மாலை நேர மண விழா நிகழ்ச்சிகளுக்கு நல்லது.

கண்கள் மழைக் காலத்திற்கு மேட் ஐ-ஷேடோக்கள் தான் பெஸ்ட். பகல் நேரங்களில் பேஸ்டல் டோண்ட் ஐ-ஷேடோக்கள் சூப்பராக இருக்கும். மாலை வேளைகளில் பழுப்பு, சாம்பல், கருப்பு, ப்ரான்ஸ் உள்ளிட்ட மேட் ஐஷேடோக்கள் நன்றாக இருக்கும். மழைக் காலமாதலால், தண்ணீர் புகாத மஸ்காரா போட்டுக் கொள்ளலாம்.

கண்டிப்பாகத் தேவை உங்கள் முகத்தின் மையப் பகுதி, புருவங்கள் மற்றும் தாடைகள் ஆகிய பகுதிகளைப் பளபளப்பாக வைத்திருக்க மேட்டுகளால் ஆனவற்றைப் பயன்படுத்த வேண்டும். காண்ட்டூர் மற்றும் ஹைலைட்ஸ் ஆகியவை உங்கள் முக அழகை சமமாக வைத்திருக்க உதவும்.

ஓவர் மேக்கப் வேணாம் முடிந்த வரை இயற்கையான முக அழகைப் பராமரிக்க வேண்டும். மிகவும் ஓவராக மேக்கப் செய்து கொள்ள வேண்டாம். உங்கள் சருமத்தை விட லைட்டான நிறங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம். சரியான நிறத்தை மட்டும் தேர்ந்தெடுங்கள். அதே போல், மேக்கப் என்ற பேரில் முகத்தில் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமான நிறங்களை அள்ளித் தெளித்து விடாதீர்கள். ஆத்திர அவசரத்திற்கு... உங்கள் திருமணம் முடியும் வரை மேக்கப் கலையாது, கவலை வேண்டாம் என்று உங்களுக்கு மேக்கப் போட்டுவிட்ட பியூட்டிசியன் சொல்லி விட்டுத்தான் போவார். ஆனால் மழைக் காலத்தில் எப்போது, என்ன வேண்டுமானாலும் நடக்கும். எனவே ஒரு மேக்கப் கிட்டை எப்போதும் கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். குறைந்தது, கண்களுக்கும் உதடுகளுக்கும் தேவையானவற்றை வைத்துக் கொள்ளவும்!

Tomatoes Help to keep the body slim


உடலை ஸ்லிம்மாக வைத்து கொள்ள உதவும் தக்காளி

உடலை ஸ்லிம்மாக வைத்து கொள்ள உதவும் தக்காளி

பழுத்த தக்காளி பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது.
 
சிறு நீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளிச் சாறு சிறந்தது. 
 
தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவுகிறது.
 
தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில் பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
 
பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.
 
சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்கள் இதற்கான ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் தக்காளி வழங்கப்பட்டது. மற்றொரு பிரிவினருக்கு சான்டவிச்சுடன் கேரட் வழங்கப்பட்டது. இதில் தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.
 
இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், “இது சிறிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றாலும் முடிவு திருப்திகரமானதாக உள்ளது. தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தவுள்ளோம்’ என்றார்.

medical beauty tips you can do at home in natural way


இயற்கையான முறையில் வீட்டிலே செய்யக்கூடிய மருத்துவ அழகுக் குறிப்புகள்

இயற்கையான முறையில் வீட்டிலே செய்யக்கூடிய மருத்துவ அழகுக் குறிப்புகள்
நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
 

 


கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
 
இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
 
கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
 
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.
 
ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
 
தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
 
தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

Bright Face Heres Tomato


முகம் பளிச்.. பளிச்.. என மின்னிட இதோ இருக்கு தக்காளி

முகம் பளிச்.. பளிச்.. என மின்னிட இதோ இருக்கு தக்காளி


தக்காளியில் உள்ள லைகோ பீன் என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட், சருமத்தை, விரைவில் முதிர்ச்சி ஆகாமல் பார்த்துகொள்ளும். புறஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. தக்காளியில் உள்ள சாலிசிலிக் அமிலம், முகப்பருக்களை விரட்டுகிறது.


 
 

* பழுத்த தக்காளியை பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.

பழுத்த தக்காளியை பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்தால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.
 
* தக்காளிச்சாறு மற்றும் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
 
* ஒரு டீஸ்பூன் தக்காளிச் சாறுடன் சில துளிகள் எலுமிச்சைச் சாறு கலந்து, பஞ்சில் தோய்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்து வந்தால், முகத்தில் உள்ள பெரிய துளைகள் சுருங்கி முகம் பொலிவு பெறும்.
 
* நன்கு கனிந்த 2 தக்காளி, 1/2 கப் தயிர் இரண்டையும் ஒன்றாக அரைத்து, முகம், கை, காலில் தினமும் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வர, சூரிய ஒளியினால் ஏற்பட்ட கருமை மறையும்.
 
* 3 டீஸ்பூன் தக்காளிச் சாறு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் மில்க் கிரீம் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போட்டால், முகம் பளிச்சிடும். வாரம் இருமுறை இதுபோன்ற செய்து வர வேண்டும்.
 
* 2 டீஸ்பூன் தக்காளிச் சாறு, 1 டீஸ்பூன் ஓட்மீல், 1 டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முகம் பிரகாசிக்கும்.
 
* 1 டேபிள்ஸ்பூன் தக்காளிச் சாறுடன் 1 டேபிள்ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வர, சருமத்தின் நிறம் மாறுவதை கண்கூடாகப் பார்க்கலாம்.


How can black women dress up for a wedding?



கருப்பான பெண்கள் எப்படி தங்களை கல்யாணத்திற்கு அழகுபடுத்திக் கொள்ளலாம்?  அவரவர் நிறத்திற்கு தகுந்தாற்போல் மேக்கப் செய்தால் எல்லாருமே தேவதைகள்தான். குறிப்பாக கருப்பாக இருக்கும் பெண்களுக்கு சருமம் மிக மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். சந்தேகமில்லை. வெயிலின் பாதிப்பு இருக்காது. அதனால் இளமையாகவும் சருமம் சுருக்கமின்றியும் இருக்கும். இது கருப்பாக இருப்பவர்களுக்கு கிடைத்த பரிசு என சொல்லலாம்.  நைஜீரிய பெண்களின் சருமம் இயற்கையில் வசீகரமானது. அதனாலேயே பொலிவாகவும் பளபளப்பாகவும் இருக்கும். அவர்கள் தங்களை எப்படி திருமணத்தின்போது மிக அழகாய் ஜொலிப்பார்கள். அவர்கள் எப்படி அழகுபடுத்திக் கொள்கிறார்கள் எனத் தெரிந்தால் நமக்கும் அது உபயோகமாக இருக்கும். அதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் தேவையானவை : ஃபவுண்டேஷன் ஃபேஸ் பவுடர் அட்ர்த்தியான பிரஷ் பிங்க் லிப் க்ளாஸ் பிங்க் லிப்ஸ்டிக் சிவப்பு உதட்டு லைனர் ஐ லைனர் அழியாத கண்மை மெல்லிய பிரஷ் செய்முறை :1 முதலில் ப்ரைமர் கொண்டு முகத்திற்கு ஒரே நிறம் தந்திட வேண்டும். அதனால் திட்டு திட்டாக முகத்தில் உருவாவதை தடுக்க முடியும். ஸ்டெப் -2 கருப்பாக இருப்பவர்களுக்கு மஞ்சள் ஃபவுண்டேஷன் மிகவும் எடுப்பாக இருக்கும். ஆகவே அதனை வாங்கிக் கொண்டு முகம் முழுவதும் புள்ளிகளாக வைத்து மெதுவாக மேல்னோக்கி தடவுங்கள். மறக்காமல் கழுத்திற்கும் தடவுங்கள். கண்கள் மேக்கப் செய்வதை முதலில் கண்களுக்குதான் தர வேண்டும். அதன் பின்தான் முகத்திற்கு செய்ய வேண்டும். ஆகவே கண்களில் கருவளையம் இருந்தால் கண் மேக்கப் எடுபடாது. எனவே கான்சீலர் கொண்டு கண்களுக்கு அடியில் முக்கோணம் மாதிரி தடவுங்கள். ஐ ஷாடோ பின்னர் ஐ ஷாடோவை கண்களில் நீங்கள் விரும்பும்படி லைட் நிறத்தில் கொடுத்து அதன் மேல் அடர்த்தியான ஊதா அல்லது பிங்க் நிறம் கொடுத்தால் எடுப்பாக இருக்கும். எளிதாக கண் மேக்கப்பிற்கு கண்களின் ஓரத்திலிருந்து புருவத்தின் நுனி வரை ஒரு செலோடேப்பை நீள வாக்கில் ஒட்டி அதன் பி ஐ ஷேடோ போட்டால் கச்சிதமாக அமையும். அதன் பின் செல்லோ டேப்பை உருவி விடுங்கள். முகம் இப்போது முகத்திற்கு வாருங்கள். இப்போது ஃபேஸ் பவுடரைக் கொண்டு முகத்தில் பூசுங்கல். லேசாக பிரஷ் பட்டால் போதுமானது. அதுவே மிகைப்படுத்தாத மேக்கப்பை காண்பிக்கும். உதடு : உதட்டிற்கு அடர்த்தியான சிவப்பு நிற லைனரை உபயோகியுங்கள். அதன் பின் பிங்க் நிற லிப்ஸ்டிக்கை பூசவும். இது உங்களை அழகாக காண்பிக்கும். இந்த அடர்த்தியான நிறம் பிடிக்க வில்லையென்ரால் லைட் கலர் லிப்ஸ்டிக்கை பூசிக் கொள்ளலாம்.


Does ophthalmic cough stop you? Then read this
வாய் நாற்றம் உங்களை பேசவிடமால் தடுக்கிறதா? அப்ப இத படிங்க

வாய் துர்நாற்றத்தினால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறீர்களா? நீங்கள் பேச வாயை திறந்தாலே அருகில் இருப்பவர்கள் மூக்கை மூடிக்கொள்கிறார்களா? இனி கவலை வேண்டாம் வாய் துர்நாற்றத்தை எப்படி போக்குவது என்பது பற்றி காண்போம்.

இலவங்கப்பட்டை


இலவங்கப்பட்டை இலவங்கப்பட்டையை ஒரு கப் அளவு நீரில் இட்டு காய்ச்சி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள். இந்த நீரை வாய்கொப்பளிக்க பயன்படுத்தினால் வாய் துர்நாற்றம் நீங்கும். 
பார்ஸ்லி இலைகள்



பார்ஸ்லி இலைகள் பார்ஸ்லி இலைகள் வாய் துர்நாற்றத்திற்கு நல்ல பலன்களை தரும். இவற்றை வாயில் இட்டு மென்றால் வாய்துர்நாற்றம் நீங்கும்.

ஏலக்காய் விதைகள்


ஏலக்காய் விதைகள் ஏலக்காய் விதைகளை மெல்லுவதன் மூலம் உங்களுக்கு இனிமையான சுவாசம் கிடைப்பது உறுதி. கிராம்பு கிராம்பு வாய் மற்றும் பல் பிரச்சனைகளை ஏற்றது. கிரம்பை மென்று வாயில் வெற்றிலையை போல அடக்கிக்கொண்டால் வாய் துர்நாற்றம் போகும். சில நறுமண பொருட்களையும் மெல்லலாம். எலுமிச்சை நீரில் எலுமிச்சை சாறும் உப்பு சேர்த்து இந்த கலவையால் வாய் கொப்பளித்து வந்தால் வாய்துர்நாற்றம் போகும். கொத்தமல்லி கொத்தமல்லி ஒரு சிறந்த நறுமணப்பொருள் ஆகும். இதை வாயில் போட்டு மென்றால் வாய்துர்நாற்றம் நீங்கும். மங்குஸ்தான் பழம் மங்குஸ்தான் பழத்தை நன்கு மென்று சாப்பிடுவதால் வாய்துர்நாற்றம் நீங்கும். ஆனால் சாப்பிட்ட உடன் வாய்கொப்பளித்து விடுங்கள். இல்லையென்றால் உணவு துணுக்குகள் பற்களில் சிக்கிக்கொள்ளும். தினமும் இருமுறை அவசியம் பற்களை சுத்தம் செய்யும் போது நாக்கையும் சேர்த்து சுத்தம் செய்யுங்கள். தினமும் இரண்டு முறை பல்துலக்குங்கள். இரவு வேலை இரவு வேலை செய்பவர்களுக்கும், நீண்ட நேரம் சாப்பிடமால் இருப்பவர்களுக்கும் வாய்துர்நாற்றம் உண்டாகும். அவர்கள் இந்த முறைகளின் மூலம் சிறந்த பலனை அடையலாம்.